» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 19,076 பேர் பங்கேற்பு
திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. இன்றைய தேர்வில் 19,076 பேர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்கின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இத்தேர்வுகள் மார்ச் 02 முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 மையங்களில் 8,547 மாணவர்கள் மற்றும் 10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முதல் நாள் தேர்வில் 8,435 மாணவர்கள் மற்றும் 10,641 மாணவிகள் என மொத்தம் 19,076 பேர் பங்கேற்றனர். ஒட்டுமொத்த வருகை சதவீதம் 99% ஆகும். அனைத்து மையங்களிலும் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தரைதள அறைகள் மற்றும் சொல்வதை எழுதுபவர் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







