» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 19,076 பேர் பங்கேற்பு

திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.  இன்றைய தேர்வில் 19,076 பேர் பங்கேற்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்கின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இத்தேர்வுகள் மார்ச் 02 முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 மையங்களில் 8,547 மாணவர்கள் மற்றும் 10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முதல் நாள் தேர்வில் 8,435 மாணவர்கள் மற்றும் 10,641 மாணவிகள் என மொத்தம் 19,076 பேர் பங்கேற்றனர். ஒட்டுமொத்த வருகை சதவீதம் 99% ஆகும். அனைத்து மையங்களிலும் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தரைதள அறைகள் மற்றும் சொல்வதை எழுதுபவர் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory