» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி இளைஞர் கொலை வழக்கு: மேலும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!

திங்கள் 2, மார்ச் 2026 8:44:45 AM (IST)

கோவில்பட்டியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (எ) மனோஜ் (18). பிளம்பிங் மற்றும் மின்சார வேலை செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அரிவாள் மற்றும் கத்தியால் மனோஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

படுகாயமடைந்த மனோஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது வள்ளுவர் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் சிவபிரசாத் (19) என்பவரும், செண்பகா நகர், புது கிராமம் மற்றும் கடலையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory