» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை
திங்கள் 2, மார்ச் 2026 8:30:37 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீக்கிலிப்பட்டி மேற்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி பெருமாள். இவரது மகன் ராமராஜ் (27). இவர் கோவில்பட்டியில் தள்ளுவண்டி கடை வைத்து சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் மனிஷா (20) என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு ராமராஜ் வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டார். பின்னர், அவர் தனது மனைவியுடன் அறைக்குச் சென்றார். இரவில் மனிஷா நன்றாக உறங்கிவிட்ட நிலையில், ராமராஜ் உறங்காமல் விழித்திருந்துள்ளார். மறுநாள் காலை மனிஷா எழுந்து பார்த்தபோது, ராமராஜ் வீட்டின் உத்தரத்தில் தூக்கிட்டுப் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறினார்.
தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், ராமராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனையா, கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பீக்கிலிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







