» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது

திங்கள் 2, மார்ச் 2026 8:11:07 AM (IST)

கோவில்பட்டி அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பூபாண்டி (22). முருகேசன் என்பவரது மகனான இவர், ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். பூபாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசியதுடன், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாண்டியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory