» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:34:40 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான பி. கீதா ஜீவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.
விளாத்திகுளம் தொகுதியில்
அதேபோல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் (சட்டமன்ற சட்ட விதிகளின் ஆய்வுக்குழுத் தலைவர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்) வழங்கினார். இந்த நிகழ்வில் விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான பி. கீதா ஜீவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.
விளாத்திகுளம் தொகுதியில்
அதேபோல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் (சட்டமன்ற சட்ட விதிகளின் ஆய்வுக்குழுத் தலைவர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்) வழங்கினார். இந்த நிகழ்வில் விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வி.ஜி.எஸ் பள்ளியின் 10-வது தாளாளராக சுதன் ஹீலர் பொறுப்பேற்பு!
சனி 28, பிப்ரவரி 2026 9:31:12 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் உயிரிழப்பு
சனி 28, பிப்ரவரி 2026 5:45:58 PM (IST)

துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது!
சனி 28, பிப்ரவரி 2026 4:41:41 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் : உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
சனி 28, பிப்ரவரி 2026 3:49:27 PM (IST)

தூத்துக்குடி பள்ளிக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் விசிட் : பழைய நினைவுகளில் மூழ்கினார்!
சனி 28, பிப்ரவரி 2026 3:39:25 PM (IST)

தூத்துக்குடி அருகே 30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
சனி 28, பிப்ரவரி 2026 11:30:11 AM (IST)











தமிழ்ச்செல்வன்Feb 27, 2026 - 08:38:58 PM | Posted IP 172.7*****