» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியைப் பிரிந்த மன வேதனையில் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:47:35 AM (IST)
தூத்துக்குடியில் மனைவி, குழந்தையைப் பிரிந்த மன வேதனையில் இருந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி பாத்திமா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி கமல்ராஜ் மகன் லேசிங்டன் கமல்ராஜ் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு ஷைனி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த லேசிங்டன் கமல்ராஜ், தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லேசிங்டன் கமல்ராஜ் நைலான் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து லேசிங்டன் கமல்ராஜின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வி.ஜி.எஸ் பள்ளியின் 10-வது தாளாளராக சுதன் ஹீலர் பொறுப்பேற்பு!
சனி 28, பிப்ரவரி 2026 9:31:12 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் உயிரிழப்பு
சனி 28, பிப்ரவரி 2026 5:45:58 PM (IST)

துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது!
சனி 28, பிப்ரவரி 2026 4:41:41 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் : உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
சனி 28, பிப்ரவரி 2026 3:49:27 PM (IST)

தூத்துக்குடி பள்ளிக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் விசிட் : பழைய நினைவுகளில் மூழ்கினார்!
சனி 28, பிப்ரவரி 2026 3:39:25 PM (IST)

தூத்துக்குடி அருகே 30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
சனி 28, பிப்ரவரி 2026 11:30:11 AM (IST)










