» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
20 ஆண்டுகாலப் புறக்கணிப்பு: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஏழுமலையான் நகர் மக்கள்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:24:34 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் நகர் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை அதிகாரிகள் முழுமையாகப் புறக்கணித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள ஏழுமலையான் நகர், மாநகராட்சியின் 15-வது வார்டுக்கு உட்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்தப் பகுதியில், தற்போது 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டு அரசு சார்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெறும் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக, இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்தி வருகின்றனர்.
முறையான சாலை வசதி, தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் வடிகால் போன்ற எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மனுக்களைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முன்வருவதில்லை. வரிக் கட்டணங்களை முறையாகச் செலுத்தியும் அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் நிலையில் நாங்கள் உள்ளோம்," என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய சாலைகள் அமைப்பது மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)







