» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி கந்த சஷ்டி பாராயணம்

வியாழன் 26, பிப்ரவரி 2026 10:20:16 AM (IST)



திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் விரைவில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தட்டார்மடம் பகுதியில் முருக பக்தர் பேரவை சார்பில் கந்த சஷ்டி பாராயணம்  பாடப்பட்டது.

சாத்தான்குளம் வட்டம் முருக பத்தர்கள் பேரவை சார்பில் தட்டார்மடம் மேலத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சிவன் குடியேற்று, அழகப்பபுரம், பிச்சிவிளை, பெருமாள்புரம், கொம்மடிக்கோட்டை, வைரவம், முக்கந்தன்விளை, மோடி நகர், இடைச்சிவிளை, சுப்பிரமணியபுரம், புத்தன்தருவை–கஸ்பா தெரு, உட்பட்ட பகுதிகளில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் விரைவில் தீப ஏற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது . 

இதில் அந்தந்த தெருவை சேர்ந்த முருக பக்தர்கள் பேரவை பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி பாடினர். இதில், இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்தர், சாத்தான்குளம்  ஒன்றிய பொதுச்செயலாளர் மாயவன முத்து சாமி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கட கிருஷ்ணன், மாரிமுத்து, ஒன்றிய துணைத்தலைவர் சித்திரை செல்வன், ஒன்றிய தலைவர் மணி, கஸ்பா தெரு கிளைத்தலைவர் முத்துக்குமார், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் ராமக்கனி, கீதா, தமிழரசி உட்பட 150-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory