» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு

புதன் 25, பிப்ரவரி 2026 4:38:14 PM (IST)

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சுண்டப்பபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முனியாண்டி (58). இவர், லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இன்று முனியாண்டி தனது வாகனத்தில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் அருகே சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற லாரி எதிர்பாராதவிதமாகத் திடீரென நிறுத்தப்பட்டது.

முனியாண்டி பிரேக் போட்டு வாகனத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தும், வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முனியாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முனியாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவரான குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மகன் ரஞ்சித் ஜோத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory