» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் 13 பவுன் நகைப்பறிப்பு: 3 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை - எஸ்பி பாராட்டு!
புதன் 25, பிப்ரவரி 2026 11:26:48 AM (IST)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற இருவரை, அடுத்த 3 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை நடுக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி மந்திரமுத்து (57). இவர் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். நேற்று மதியம், தனது அண்ணன் கருப்பசாமியுடன் (66) மோட்டார் சைக்கிளில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் சென்றார்.
உமரிக்கோட்டை சாலை பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மந்திரமுத்துவின் பைக் மீது மோதி அவர்களைக் கீழே தள்ளினர். பின்னர், மந்திரமுத்து கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 6 பவுன் சங்கிலி என மொத்தம் 13 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் ஆகும். இது குறித்து மந்திரமுத்து அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப்பதிவு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், ரூரல் டிஎஸ்பி சுதீர் ஆலோசனையின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் தனிப்படை காவலர் பொன்பாண்டி தலைமையிலான குழுவினர், அந்தச் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் மேலத்தட்டாப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஹரி ராமதுரை மகன் தளவாய் ராஜ் (33) மற்றும் பேச்சிமுத்து மகன் முருகன் (33) என்பது உறுதியானது. உடனடியாக இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 13 பவுன் நகைகளையும் மீட்டனர்.
இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் தனிப்படை காவலர் பொன்பாண்டி ஆகியோரை எஸ்பி மதன் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

பாதாள சாக்கடைப் பணியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் பலி : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:11:16 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு 21 நாடார் அமைப்புகள் ஆதரவு: இபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

தூத்துக்குடி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள்: அகற்றக்கோரி விசிக சாலை மறியல் போராட்டம்
புதன் 25, பிப்ரவரி 2026 7:53:50 PM (IST)

லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 4:38:14 PM (IST)










