» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது!
புதன் 25, பிப்ரவரி 2026 8:23:41 AM (IST)
சாகுபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று சாகுபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.
போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தபோது, அவர்களது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. சுமார் 125 கிராம் எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், உச்சிநிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (23) மற்றும் காயல்பட்டினம் ரத்தினாபுரி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் ராஜீவ் பிரபு (23) என்பது தெரியவந்தது. இவர்கள் அந்தப் பகுதியில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்குக் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)







