» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது: மது போதையில் நேர்ந்த கொடூரம்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 8:36:16 AM (IST)
எட்டயபுரம் அருகே காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், எட்டயபுரம் அருகே மினி வேனில் மதுபோதையில் படுத்திருந்தபோது 3 பேரால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகக் கவர்னகிரியைச் சேர்ந்த முனியசாமி (36), பொன் மாடசாமி (26) மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இருக்கன்குடி கோவிலில் நடந்த காதணி விழாவின் போது, பெரியநாயகம் கூடுதலாக மது அருந்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உணவருந்தச் சென்றபோது ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த மூவரும், பெரியநாயகம் வேனில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெரியநாயகத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்கக் கோரி முழக்கமிட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடலைப் பெற்றுச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

பாதாள சாக்கடைப் பணியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் பலி : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:11:16 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு 21 நாடார் அமைப்புகள் ஆதரவு: இபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

தூத்துக்குடி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள்: அகற்றக்கோரி விசிக சாலை மறியல் போராட்டம்
புதன் 25, பிப்ரவரி 2026 7:53:50 PM (IST)

லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 4:38:14 PM (IST)










