» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பருவமழை குறைவால் விவசாய நிலங்கள் பாதிப்பு : ஆட்சியர் நேரில் ஆய்வு!
சனி 21, பிப்ரவரி 2026 5:11:43 PM (IST)

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் வடகிழக்கு பருவமழை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 19.02.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் இன்று மேல்மாந்தை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சி நிலை மற்றும் சேத விபரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பயிர் சேதங்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு ஹாக்கி போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:52:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.74.81 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 8, ஏப்ரல் 2026 3:18:30 PM (IST)

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 3:10:58 PM (IST)

விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற 7பேர் காயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 12:49:40 PM (IST)

தூத்துக்குடியில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : தவெக நிர்வாகிகள் - தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 8, ஏப்ரல் 2026 12:29:51 PM (IST)

தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடங்கியது : பயணிகள் உற்சாக வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:43:22 AM (IST)







