» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக கனிமொழி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு தேவகி நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்கான திட்டமானது, 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களின் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதற்கான இடத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா, வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அதிநவீன உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி தளங்களுடன் இந்த பூங்கா அமையவுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் இது கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு ஹாக்கி போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:52:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.74.81 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 8, ஏப்ரல் 2026 3:18:30 PM (IST)

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 3:10:58 PM (IST)

விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற 7பேர் காயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 12:49:40 PM (IST)

தூத்துக்குடியில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : தவெக நிர்வாகிகள் - தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 8, ஏப்ரல் 2026 12:29:51 PM (IST)

தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடங்கியது : பயணிகள் உற்சாக வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:43:22 AM (IST)







