» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:19:26 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவைச் சேர்ந்த ஜான்சன் (52) என்பவர், நேற்று மதியம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார்.
மறைந்த ஜான்சனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜான்சன் திருவுருவப் படத்திற்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், மீன்பிடி தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







