» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் - வேன் மோதல்: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு!

திங்கள் 16, பிப்ரவரி 2026 7:56:18 AM (IST)

குளத்தூர் அருகே சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பள்ளாகுளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான குருசாமி (40), தற்போது குளத்தூர் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை குருசாமி, தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான முகிலரசன் (5), சுமித்ரன் (3), தனது சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் ஒரு பணிப்பெண் ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் குளத்தூரிலிருந்து பள்ளாகுளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைப்பாறு பாலம் அருகே வாகனம் சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா வேன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குருசாமி உள்ளிட்ட ஐந்து பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளத்தூர் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுநரான தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த பச்சைக்கிளி (55) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory