» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிவராத்திரி விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திங்கள் 16, பிப்ரவரி 2026 7:52:43 AM (IST)


தூத்துக்குடி சிவன் கோவிலில்  சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாரானை நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில், உலக நன்மைக்காக  சுமார் திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, அவற்றின் முன்பாக 204 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு இந்தச் சிவலிங்கங்களுக்குப் பக்திப்பரவசத்துடன் பூஜை செய்தனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சிறுவர்களுக்கான இந்து சமய சான்றோர்கள் மாறுவேடப்போட்டி, தேவாரப்பாடல் இசைப்போட்டி, பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓம் நமச்சிவாயம் எழுதினர் இவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பேனா, பால் பிஸ்கட் பேப்பர் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory