» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!

சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் நளை (ஞாயிற்றுக்கிழமை) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு  நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், நாளை 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சிவராத்திரியின் முதல் கால பூஜை இரவு 09.00 மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்கி, 10.00 மணிக்கு தீபாராதனையுடன் நிறைவடையும். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை இரவு 11.00 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரையிலும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 01.00 மணி முதல் 02.00 மணி வரையிலும் நடைபெறும். இறுதி நிகழ்வாக நான்காம் கால பூஜை அதிகாலை 03.00 மணிக்குத் தொடங்கி 05.00 மணி வரை நடைபெறும். 

சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, மறுநாள் அதிகாலை 05.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 06.00 மணிக்கு திருவனந்தல் வழிபாடும், 06.30 மணிக்கு காலசந்தி பூஜையும் நடைபெற உள்ளன. மேலும் கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பூஜைகளை கோவில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம் பட்டர் ஆகியோர் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory