» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 300 பேர் திமுகவில் இணைந்தனர்

சனி 14, பிப்ரவரி 2026 3:14:40 PM (IST)



தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். 

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் (ஓபிஎஸ் அணி) தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில் அந்த அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவருமான ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் ஓபிஎஸ் அணியின் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் மற்றும் விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் திமுகவின் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியச் செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், மும்மூர்த்தி, செல்வராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory