» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது

வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக (DP) வைத்து, பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட முயன்ற நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலி வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகவும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் தீபு மேற்பார்வையில், ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவர் பொதுமக்களிடம் பண மோசடி செய்யும் நோக்கத்தில் ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலி கணக்குகளை உருவாக்கியது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, உத்திரப்பிரதேச மாநிலத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார், கடந்த 09.02.2026 அன்று அனுஜ் குமாரைக் கைது செய்தனர். அவர் நேற்று (12.02.2026) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரைக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory