» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)
கோவில்பட்டியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.09.2018 அன்று 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து வழக்கு குறித்த சாட்சியங்களை சேகரித்தனர்.
மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த டேவிட் ராஜ் 20/18 (28/26), அப்போது இளஞ்சிறாராக இருந்த ஒருவர் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி குற்றவாளிகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேற்படி கொலை வழக்கு 8 வருடங்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் ஒருவரை கைது செய்தும் ஒருவரை கையகபடுத்தியும் சிறப்பாக பணிபுரிந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களின் பணி போற்றத்தக்கது : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:03:52 PM (IST)









