» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துறைமுக விபத்தில் உயிரிழந்த 3 கடலோடிகள் குடும்பத்திற்கு ரூ.49.77 லட்சம் நஷ்டஈடு வழங்கல்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:35:00 AM (IST)

தூத்துக்குடி துறைமுக விபத்தில் உயிரிழந்த 3 கடலோடிகள் குடும்பங்களுக்கு நிலுவையில் இருந்த இன்சூரன்ஸ் தொகை ரூ.49.77 லட்சம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி மிதவைக்கலன் விபத்தில் உயிரிழந்த மூன்று கடலோடிகளின் குடும்பங்களுக்கு, நிலுவையில் இருந்த இன்சூரன்ஸ் தொகை நேற்று (05-02-2026) கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கம்பெனி நிர்வாகம் சார்பில் ரூ. 30 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள காப்பீட்டுத் தொகையான (Insurance Amount) ரூ. 50 லட்சத்தைப் பெற்றுத்தர பல்வேறு மீனவ அமைப்புகளும், மாலுமிகள் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த மூன்று கடலோடிகளின் குடும்பத்தினரிடம் ரூ.49,77,783-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த நஷ்டஈடு தொகை பெற்றுத்தர உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாண்டியபதி பரதவர் நலத் தலைமைச் சங்கம் தனது நன்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் இன்னாசி விடுத்துள்ள அறிக்கையில்: "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க இறுதிவரை உடனிருந்த Snows Shipping உரிமையாளர் கிஷோர், சட்ட ஆலோசனைகள் வழங்கி களத்தில் நின்ற த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் ஆகியோருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும், இதற்காகக் குரல் கொடுத்த அனைத்து மீனவ மற்றும் மாலுமிகள் சங்கங்களுக்கும், பாண்டியபதி பரதவர் நலத் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 'ஒற்றுமையே பலம்' என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









