» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம் : வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல்
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:22:12 AM (IST)

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த 2 மினி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோர் கோவில்பட்டி நகர பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினார்கள்.
சோதனையின் போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதை அகற்றி, 4 பஸ்களுக்கு அபராத அறிக்கை வழங்கப்பட்டது. இதேபோல அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் இயக்காமலும், அதிக கட்டணம் வசூலித்த 2 மினி பஸ்களுக்கு அபராத அறிக்கை வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










