» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன் சந்தையில் மீன்களை திருடியவர் கைது

ஞாயிறு 21, செப்டம்பர் 2025 8:58:52 AM (IST)

சாத்தான்குளத்தில் மீன் சந்தையில் புகுந்து 21 கிலோ மீன்களை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் மகன் முரசொலி மாறன். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  விற்பனை முடிந்ததும் பதப்படுத்திய மீன்களை சந்தையில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று வந்து பார்த்தபோது 21 கிலோ மீன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து முரசொலி மாறன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மீன்களை திருடிய நபர் சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தை சேர்ந்த தங்கத்துரை மகன் அப்பாதுரை (55) எனவும், தெருவில் கிடக்கும் காலி பாட்டில்களை சேகரித்து விற்பவர் எனவும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory