» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் : பாஜக புகார்!

சனி 20, செப்டம்பர் 2025 8:01:07 PM (IST)

பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடிய அமைச்சர் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக பாரதிய ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவின் உதயசூரியன் சின்னத்துடன் கூடிய கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்றனர். 

இந்தப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்பந்தம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது தவறான முன் உதாரணமாக அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் மாவட்ட கல்வி அதிகாரி மீதும் சட்டப்பூர்வ துறை ரீதியிலான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory