» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் : பாஜக புகார்!
சனி 20, செப்டம்பர் 2025 8:01:07 PM (IST)
பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடிய அமைச்சர் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவின் உதயசூரியன் சின்னத்துடன் கூடிய கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்றனர்.
இந்தப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்பந்தம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது தவறான முன் உதாரணமாக அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் மாவட்ட கல்வி அதிகாரி மீதும் சட்டப்பூர்வ துறை ரீதியிலான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










