» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது

சனி 13, செப்டம்பர் 2025 9:04:43 AM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அக்குவா அவுட் பேக் அமைப்பு ஆகியன சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று தொடங்கியது. படகில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல், கைட் சர்ஃபிங், பீச் வாலிபால், மாரத்தான், ஒய்ல்டு வாரியர் போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. 

இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர். தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிகள் நாளை (செப். 14) ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory