» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது
சனி 13, செப்டம்பர் 2025 9:04:43 AM (IST)

தூத்துக்குடியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அக்குவா அவுட் பேக் அமைப்பு ஆகியன சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று தொடங்கியது. படகில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல், கைட் சர்ஃபிங், பீச் வாலிபால், மாரத்தான், ஒய்ல்டு வாரியர் போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன.
இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர். தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிகள் நாளை (செப். 14) ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)










