» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் தனியார் ஊழியர் பலி
புதன் 11, ஜூன் 2025 10:45:17 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், கீழ காந்தி நகரை சேர்ந்தவர் சடையப்பன் மகன் மணிகண்டன் (45). தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் திருச்செந்தூர் வந்துள்ளார். பின்னர் விருதுநகர் செல்வதற்காக தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
முடுக்கு காடு அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










