» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!

திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)



நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்தின் 20 வது ஆண்டு விழாவில் சிறுவர் இல்லத்தில் மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு நாசரேத் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் ஞானையா தலைமை வகித்தார். வடலிவிளை பள்ளி ஆசிரியர் மெர்வின், தூத்துக்குடி ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகன், நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ஐஜினஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நற்செய்தி பணிக்குழு இயக்குனர் பிரான்சிஸ் அடிகளார் ஜெபித்து விழாவை தொடங்கி வைத்தார். ஆரம்பமாக தோப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் அனைவரையும் வரவேற்றார். பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் இறைஆசி வழங்கினார்.

பரணி பிராய்லர்ஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ், உதுமான், பிரவீன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். சிறுவர் இல்ல மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்னோ ரியல் எஸ்டேட் உரிமையாளர் இருதய ஞான ரமேஷ் பொருளாதாரத்தில் பின் தங்கிய 120 மாணவ_ மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்.

இதில் முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், முன்னாள் மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசு, சகாயரூபன், கவுன்சிலர் அதிசயமணி மற்றும் அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக அன்னை தெரேசா தொண்டு நிறுவன செயலாளர் காட்வின் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவன தலைவர் அந்தோணி ராஜா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory