» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்

திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னை பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலில் நாளை 16ஆம் தேதி முதல் மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது

இதன்படி காலை 3.30மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4 மணிக்கு திருவனந்தல் 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை, 8 மணிக்கு கால சந்தி 10 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் கோவில் நடை அடைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது.

5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டும் மதியம் 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்

தூத்துக்குடி தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி மாதம் காலை 4:30 மணி நடைதிறப்பு,  5.30மணிக்கு தீபாரதனை, 10.00மணிக்கு  திருகாப்பிடு, மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, 8 மணி திருகாப்பிடு செவ்வாய்,வெள்ளிகிழமைகளில் பகல் 12 மணிக்கும் இரவு 9 மணிக்கும் திருகாப்பீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory