» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!

ஞாயிறு 8, ஜூன் 2025 12:01:02 PM (IST)



தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகரத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வாரம் தோறும் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இன்று 369வது வாரத்தை முன்னிட்டு லூர்த்தம்மாள்புரம் மெயின் ரோடு, பள்ளிவாசல் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆல் கேன் டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமை தாங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கைப்பந்து கழக முன்னாள் செயலாளர் பாண்ஸ் ஜெய் கிருஷ்ணன், வேல்பாண்டி, இம்மானுவேல் ஆசீர், கேசவன், மைக்கேல், பிரைட்டர், வேல்முருகன், செந்தில், ரகுபதி, மருத பெருமாள், ஜெயராஜ், ராஜரத்தினம், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory