» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2½ வயது குழந்தை திடீர் மரணம் : போலீஸ் விசாரணை

புதன் 4, ஜூன் 2025 8:19:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2½ வயது குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி செய்யது சபீனா. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஷாஜினி சாரா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில்,இன்று அருண்குமார் வேலைக்குச் சென்று விட்டார். 

வீட்டில் செய்யது சபீனா வேலை செய்து கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்துள்ளார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். 

அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு வந்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், டிவி அருகே உள்ள மின்சார வயரில் குழந்தையின் கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory