» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலையை சீரமைக்க கோரிக்கை!

புதன் 4, ஜூன் 2025 3:39:37 PM (IST)



தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி சண்முகபுரம் 1வது, 2வது தெரு, மற்றும் வண்ணார் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டது. பைப் லைன் பதித்த பின்னர் குழிகளை சரவர மூடாமல், சமன்படுத்தாமல், உடைக்கப்பட்ட சாலை கழிவுகளை அப்படியே போட்டுச் சென்றுவிட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இதில் பகல் நேரத்தில் நடந்து செல்பவர்கள் கூட பலர் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். காலை, மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்பவர்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழிகளை சமன் செய்து, மீதமுள்ள தார் சாலை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

KumarJun 4, 2025 - 04:09:50 PM | Posted IP 162.1*****

@ தார்

KumarJun 4, 2025 - 04:08:57 PM | Posted IP 162.1*****

எல்லா இடத்திலும் அதர் சாலை அமைத்தாகிவிட்டதாக அறிக்கை விடும் அதிகாரிகள் இங்கு இருசக்கர வாகனத்தில் வரவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory