» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)

தூத்துக்குடியில் போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதியதில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் 3பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.
தூத்துக்குடி விஇ ரோட்டில் சுகம் ஓட்டல் அருகே உள்ள நடைபாதை பகுதியில் தினமும் காலை ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக காத்து நிற்பார்கள். இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் மது போதையில் ஒருவர் ஓட்டி வந்த கார் நடைபாதையில் ஏறி அங்கு நிறுத்தியருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி அருகே இருந்த டீக்கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் முருகானந்தம், சக்தி உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை மத்திய பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











மக்கள்Jun 1, 2025 - 07:24:50 PM | Posted IP 172.7*****