» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் பிரச்சனையில் அரிசி கடை அதிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 26, மே 2025 3:54:14 PM (IST)
தூத்துக்குடியில் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்த அரிசிகடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்தவர் கடற்கரை முத்து மகன் கணேசபெருமாள் (50). இவர் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பகுதியில் MSK அரிசி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நியில் கடன் பிரச்சனை காரணமாக கடந்த 24ம் தேதி தனது கடையில் வைத்து மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார்.
மது போதையில் மயக்க நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த நபர் இன்று காலை 11.00 மணியளவில் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










