» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் பிரச்சனையில் அரிசி கடை அதிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 26, மே 2025 3:54:14 PM (IST)

தூத்துக்குடியில் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்த அரிசிகடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்தவர்  கடற்கரை முத்து மகன் கணேசபெருமாள் (50). இவர் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பகுதியில் MSK அரிசி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நியில் கடன் பிரச்சனை காரணமாக கடந்த 24ம் தேதி தனது கடையில் வைத்து  மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

மது  போதையில் மயக்க நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த நபர் இன்று காலை 11.00 மணியளவில் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory