» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டு கூட்டை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!

வியாழன் 22, மே 2025 4:21:27 PM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே தோட்டத்தில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்திய கடந்தை விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சில்லாங்குளம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் எலுமிச்சை மரத்தில் கடந்தை வண்டுகள் கூடு கட்டி அச்சுறுத்தும் விதமாக இருந்தது. தோட்டத்து உரிமையாளர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு - மீட்புப் பணிநிலையத்திற்கு தொடர்பு கொண்டு கடந்தை வண்டுகளை அகற்றித் தருமாறு கோரினார். 

நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு ரெஜி மற்றும் தீயணைப்பு வீரர்கள் பெரியசாமி, வெற்றிவேல் முருகன், சுந்தர மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பந்தம் மூலம் கடந்தை விஷ வண்டுகளை அழித்து கூட்டையும் அகற்றினர். இதனால் தோட்டத்து உரிமையாளரும், சுற்றி இருந்த பொது மக்களும் நிம்மதி அடைந்தனர். 

இந்நிகழ்வின் போது தோட்டத்து உரிமையாளரின் 2 வயது பேரக்குழந்தை  சிறிய நேரத்தில் பாசத்துடன் பழகிய தீயணைப்பு வீரர்கள் சேவை முடிந்து செல்கையில் கண்ணீர் விட்டு அழுதது அப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory