» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இரயில்பாதைக்கு இணையாக சாலை அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்!
வியாழன் 22, மே 2025 3:29:02 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சி வரை இரயில்பாதைக்கு இணையாக சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர 34வது மாநாடு கட்சி அலுவலகத்தில் பாண்டி, மனோன்மணி, முனியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் பி.கரும்பன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ஞானசேகர், அலுவலக செயலாளர் எஸ்மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநகர செயலாளர் ஜி.தனலெட்சுமி அறிக்கை சமர்ப்பித்து விளக்க உரையாற்றினார்.
மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : வேகமாக வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இரயில் சேவையே கிடைத்து வருகிறது. தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சி வரை இரயில்பாதைக்கு இணையாக சாலை அமைத்தால் அதிக எண்ணிக்கையிலான இரயில் சேவை தூத்துக்குடி மாநகர மக்களுக்கு கிடைக்கும்.
மேலும் இந்த சாலையில் செல்லும் ஊராட்சி பகுதிகளிலும் வேகமாக வளர்ச்சி பெறும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்து முதல்கட்ட நிதிதியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியது என்ற போதிலும், இந்த திட்டத்திற்கான எந்த வேலையும் நடந்ததாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு இந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள் உள்ள சி.வ. குளம், பண்டாரம்பட்டி ஊரணி, அதே போன்று கோரம்பள்ளம் குளம் இவைகளை முறையாக தூர்வாரியும், கரைகளை செம்மைப்படுத்தியும் பராமரித்து எதிர் வரும் மழைக்காலத்தில் தூத்துக்குடி மாநகருககுள் வெள்ளநீர் வருவதை தடுக்க தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










