» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு நாள்: மேயர் அஞ்சலி

வியாழன் 22, மே 2025 12:51:25 PM (IST)


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார். 

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது உருவ படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி, "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சாமான்யன்மே 22, 2025 - 09:24:55 PM | Posted IP 104.2*****

அஞ்சலி சரி. வெளியேற்ற தயக்கம் ஏன்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory