» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மெஞ்ஞானபுரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை : போலீஸ் விசாரணை

புதன் 21, மே 2025 8:55:15 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (35) கல்கண்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். உடன்குடி கந்த புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். பனை தோழிலாளியான இவருக்கும் ஜெயபாலுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொட்டங்காடு ஊரில் வைத்து ஜெயபாலுக்கும் சிவ பெருமாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் கந்தபுரத்தில் இருந்து ராமசாமிபுரத்துக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு சிவபெருமான் தம்பி மோகன் (25) பின்னால் சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபால் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory