» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

திங்கள் 19, மே 2025 8:25:16 AM (IST)



திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகரத்திற்குட்பட்ட ஆலந்தலையில் 25 மற்றும் 26வது வார்டு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட இணைச்செயலாளர் விஜய் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைசெயலாளர் சிவனேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பேரூர் கழக செயலாளர் நிவாஸ் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரோகினி, ஆறுமுகநேரி பேரூர் கழக இணைச்செயலாளர் பிரகாஷ், திருச்செந்தூர் குட்டி, ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, திருச்செந்தூர் ஒன்றிய துணைச்செயலாளர் விவேக், வீரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி சர்க்கார் மதன், உடன்குடி ஜிம் ரவிச்சந்திரன், குலசை கராத்தே அமலன், மணப்பாடு விவியன், ரஞ்சன், இருதயராஜ், பிரதீப், செபஸ்தியான், கேஜீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory