» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று தாளமுத்துநகர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் தாளமுத்து நகரைச் சேர்ந்த ராஜசேகர் மகன் வரதராஜன் (25), கலைஞர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு (22) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory