» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)



திருவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் கருகும் நிலையில் இருக்கும் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர்,  சு. நம்பிராஜன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "திருவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் ஏரல், கெற்கை, லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, பேய்குளம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், அத்திரபட்டி, பட்டி. ஆகிய பகுதிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் தண்ணீரன்றி கருகும் நிலையில் இருந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் கவலையோடு இருந்து வருகிறார்கள். பாபநாசம் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தண்ணீர் திறந்து விடமால் இருந்து வருகிறார்கள். விவசாயிகள் பொதுபணித்துறை அதிகாரியிடம் மனுக்கொடுத்தாலும் திருவைகுண்டம் வடக்கால் வாய்க்காலில் பாலங்கள் வாய்க்காலில் கரை அமைத்தால் வேலைகள் நடந்து வருகிறது என்று காரணம் காட்டி தண்ணீர் திறந்து விடமால் இருந்து வருகிறார்கள். 

இந்த வேலைகளும் மெதுவாக நடந்து வருகிறது, ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிடு செய்து வடகால் பாசனத்தில் கருகும் நிலையில் இருக்கும் வழைக்களை காப்பாற்ற வடககால் பாசனத்தில் நடக்கின்ற வேலை உடனடியாக வேலைகளை மிக விரைவாக முடித்து 'பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory