» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் படகு தீவைத்து எரிப்பு: வாலிபர் கைது!

வெள்ளி 9, மே 2025 10:59:53 AM (IST)



தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மீன்பிடி நாட்டுப்படகை தீவைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பீச் ரோடு, இனிகோ நகரைச் சேர்ந்தவர் பாப்பு மகன் ஜேசுராஜ் (38), இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது உறவினரின் மகளை அதே பகுதியை சேர்ந்த சகாயம் மகன் ராபின் (22) என்பவர் காதலித்து வந்தாராம். 

இந்த காதல் விவகாரம் ஜேசுராஜுக்கு தெரியவரவே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராபின், இனிகோநகர் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த ஜேசுராஜுக்கு  சொந்தமான படகை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தாராம். இதில் படகின் இன்ஜின், வலைகள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. இதுகுறித்து ஜேசுராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து ராபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory