» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் படகு தீவைத்து எரிப்பு: வாலிபர் கைது!
வெள்ளி 9, மே 2025 10:59:53 AM (IST)

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மீன்பிடி நாட்டுப்படகை தீவைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பீச் ரோடு, இனிகோ நகரைச் சேர்ந்தவர் பாப்பு மகன் ஜேசுராஜ் (38), இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது உறவினரின் மகளை அதே பகுதியை சேர்ந்த சகாயம் மகன் ராபின் (22) என்பவர் காதலித்து வந்தாராம்.
இந்த காதல் விவகாரம் ஜேசுராஜுக்கு தெரியவரவே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராபின், இனிகோநகர் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த ஜேசுராஜுக்கு சொந்தமான படகை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தாராம். இதில் படகின் இன்ஜின், வலைகள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. இதுகுறித்து ஜேசுராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து ராபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










