» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி சிறுமி உட்பட 2பேர் பலி!
செவ்வாய் 6, மே 2025 8:55:19 AM (IST)

தூத்துக்குடியில் கடற்கரையில் குளிக்கச் சென்றபோது சிறுமி உட்பட 2பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன். ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் காளிஸ்வரி (16), உட்பட சிறுவர், சிறுமிகளை மொட்ட கோபுரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த அந்தோணி விஜயன் மற்றும் காளீஸ்வரி ஆகியோர் கடலில் மூழ்கினர்.
இந்நிலையில் காளீஸ்வரின் உடல் நேற்று இரவு கரை ஒதுங்கியது. மேலும் ஆட்டோ டிரைவர் உடலும் மொட்ட கோபுரம் அருகே கடலில் பாறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரது உடலையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











Muthurajமே 6, 2025 - 12:12:57 PM | Posted IP 172.7*****