» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம்!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:28:22 PM (IST)



உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக தருவைகுளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளின் கொடி கம்பங்களையும்  அகற்றிட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து கொடிக் கம்பங்களையும்  10.04.2025 தேதிக்குள் தங்கள் சொந்த செலவில், எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் உள்ள அரசியல் கட்சி மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory