» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள கல்லூரணி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் செண்பகராஜ் (60). விவசாயி. இவர் வீட்டில் ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் செண்பகராஜ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது திடீரென ஆடுகள் மற்றும் கோழிகள் அலறும் சத்தம் கேட்டு வந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது 3 மர்ம நபர்கள் 2 ஆடுகள் மற்றும் கோழிகள் திருடி கொண்டு ஓடியுள்ளனர். சிறிது தூரம் அவர்களை செண்பகராஜ் துரத்தி சென்றுள்ளார். ஆனால், அந்த 3பேரும் இருளில் வேகமாக ஓடி தப்பி ெசன்று விட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து ஆடு, கோழிகளை திருடி சென்ற 3மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)










