» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம், நீர் வார விழா!

சனி 22, மார்ச் 2025 3:35:31 PM (IST)



சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம் மற்றும் உலக நீர் வார விழாவை முன்னிட்டு ஆலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக தண்ணீர் தினம், காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மூத்த செயல் உதவி தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன், உதவி தலைவர் (உற்பத்தி) சுரேஷ் தலைமை வகித்தனர். 

விழாவில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கலைவாணி, துணை சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம் விஞ்ஞானி ஜெயக்குமார், Indian Register Quality Systems தணிக்கையாளர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து காெண்டு ஆலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். 

பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் தண்ணீர் சிக்கனம் சிறந்த மேலாண்மை வழிமுறைகள் மற்றும இந்த ஆண்டு உலக நீர் மற்றும் வன நாள் கருப்பொருள் பற்றியும், வலியுறுத்தினார். விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு, மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory