» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஓம்குமார் (48), இவர் அங்கு பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார் இவர் தனது குடும்பத்தினர்கள் 12 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றாராம்.
இரண்டு மணி நேரமாக வரிசையில் நின்ற அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
KumarMar 17, 2025 - 08:21:53 AM | Posted IP 172.7*****
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது பக்தர்கள் வரிசையில் தண்ணீர் கிடைக்க நல்ல காற்றோட்டம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











SamaniyanMar 17, 2025 - 01:42:06 PM | Posted IP 162.1*****