» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஓம்குமார் (48), இவர் அங்கு பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார் இவர் தனது குடும்பத்தினர்கள் 12 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றாராம்.
இரண்டு மணி நேரமாக வரிசையில் நின்ற அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
KumarMar 17, 2025 - 08:21:53 AM | Posted IP 172.7*****
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது பக்தர்கள் வரிசையில் தண்ணீர் கிடைக்க நல்ல காற்றோட்டம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)









SamaniyanMar 17, 2025 - 01:42:06 PM | Posted IP 162.1*****