» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஓம்குமார் (48), இவர் அங்கு பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார் இவர் தனது குடும்பத்தினர்கள் 12 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றாராம்.
இரண்டு மணி நேரமாக வரிசையில் நின்ற அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
KumarMar 17, 2025 - 08:21:53 AM | Posted IP 172.7*****
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது பக்தர்கள் வரிசையில் தண்ணீர் கிடைக்க நல்ல காற்றோட்டம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

SamaniyanMar 17, 2025 - 01:42:06 PM | Posted IP 162.1*****