» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடமானவைத்த அசல் ஆவணங்களை தொலைத்த பொதுத்துறை வங்கி ரூ.6 இலட்சம் வழங்க உத்தரவு!

வியாழன் 20, பிப்ரவரி 2025 4:21:03 PM (IST)

அடமான கடனை திருப்பி செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை தொலைத்த பொதுத்துறை வங்கி ரூ.6 இலட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளவிப்பட்டியைச் சார்ந்த விஞ்ஞானி பன்னீர்செல்வம் என்பவர் மத்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறையில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் திருநெல்வேலியிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றுள்ளார். அதற்காக தனது சொத்துக்களின் அசல் ஆவணங்களை வங்கியில் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் அவர் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அண்டார்டிகா சென்றதால் கடன் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வங்கி பாக்கியுள்ள வீட்டுக் கடனை உடனே செலுத்த வேண்டுமென புகார்தாரரின் மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் வங்கிக் கடன் முழுவதையும் இவர் செலுத்தி விட்டார். ஆகவே தனது சொத்துக்களின் அசல் ஆவணங்களை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால் வங்கி அசல் ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க மறுத்துள்ளது. விசாரித்ததில் தொலைந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் புகார்தாரருக்கு பாத்தியப்பட்ட அசல் ஆவணங்களின் நகல்களை அரசிடமிருந்து வங்கியின் செலவில் பெற்று இரு மாதங்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும, வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சேவை குறைபாடுக்கு ரூபாய் 5 இலட்சம் மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ரூபாய் 1 இலட்சம், வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் 6 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory