» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் தகராறு: அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

வியாழன் 20, பிப்ரவரி 2025 12:48:02 PM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் குமாரசாமி (48), கூலி தொழிலாளி. முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் தனுசுராஜ் மகன் அருண்பாண்டி (32), மெக்கானிக். இவர்கள் இருவரும் நேற்று இரவு அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டி, குமாரசாமியை அரிவாளால் வெட்டினாராம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory