» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது பழக்கத்தை மனைவி கண்டித்தால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை!

வியாழன் 20, பிப்ரவரி 2025 12:00:49 PM (IST)

திருச்செந்தூரில் மது குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முந்திரி தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் நாராயணன்.  இவருக்கு இசக்கியம்மாள் என்று மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளார்கள். 

இந்நிலையில் நாராயணன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் அவரது மனைவி திட்டினாராம். இதனால் மனமுடைந்த நாராயணன் தனது வீட்டில் முன்பு இருந்த வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory